‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி? ரசிகர்கள் அளித்த விளக்கம்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை வெறும் வதந்தி என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல்கள் வரிசையில் இருக்கிறது. TRPயிலும் முதல் இரண்டு இடங்களை இந்த சீரியல் பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியலில் முல்லை, கதிர் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். கதிர் கதாபாத்திரத்தில் குமரன் நடித்து வருகிறார். முல்லை கதாபாத்திரத்தில் முதலில் விஜே சித்ரா நடித்து வந்தார். திடீரென அவர் இறந்துவிட்ட காரணத்தினால் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது.
அபிநய் முகத்திற்கு நேராக போட்டுக் கொடுத்த பாவணி – சூடுபிடிக்கும் போட்டி! வெளியான ப்ரோமோ!
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணியாக நடிக்கும் காவ்யா அறிவுமணி, முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தால், ரசிகர்களும் விஜே சித்ரா இருந்த இடத்தில் காவ்யாவை ஏற்றுக் கொண்டனர். அவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து அவர் விலக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சேனல் தரப்பில் இது குறித்து எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை.
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!
ஆனால் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் இருந்து காவ்யா விலக இருப்பதாக வெளிவந்த செய்தி தவறானது எனவும், அவர் தொடர்ந்து முல்லையாக நடிப்பார் என விளக்கம் கிடைத்துள்ளது. மேலும் அது குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டதும் சீரியல் ரசிகர்கள் நிம்மதியில் இருக்கிறார்கள்.