“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் பல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா தற்போது விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காற்றுக்கென்ன வேலி:
விஜய் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், கல்வியை மையப்படுத்தி கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள காற்றுக்கென்ன வேலி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்துள்ளது. எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் தொடக்கத்தில் புது முக நடிகர் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தப்பட்டனர்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – ரசிகர்கள் ஷாக்!
சீரியல் தொடங்கி மக்களின் ஏகப்பட்ட வரவேற்பின் படி சென்று கொண்டிருக்கும் நிலையில், பல கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டனர். சீரியல் ஹீரோ தர்ஷன் கே ராஜு சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் சுவாமிநாதன் என்ற கன்னட நடிகர் தற்போது நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரமும் மாற்றப்பட்டது. மேலும் வழக்கமாக மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான இந்த சீரியல் தற்போது மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படி தொடர்ந்து இந்த சீரியலில் பல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது ஹீரோயினாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்காவும் விலக இருப்பதாக செய்தி பரவி வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில் சீரியலில் இருந்து நான் விலகவில்லை, தொடர்ந்து சீரியலில் நான் நடித்து வருகிறேன். எனக்கு இதுவரை அன்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என பதில் அளித்து இருக்கிறார்.