விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி? புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தனது சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாக அவர் மீண்டும் கண்ணம்மாவாக நடிக்க இருக்கிறாரா என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நடிகை ரோஷினி
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது பாரதி தான் தனது குழந்தைக்கு அப்பா என்பதை நிரூபிப்பதாக கண்ணம்மா சவால் விட்டிருக்கிறார். இதற்கிடையில் வெண்பா, ஒரு வழியாக பாரதியை சமாதானம் செய்து அவரது வீட்டில் தங்க வைப்பதற்காக திட்டமிட்டிருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்து கொள்ளும் சௌந்தர்யா அதனை கண்ணம்மா காதில் போட்டு வைக்க, வெண்பாவின் பிளானை கெடுக்கும் படி ஒரு அதிரடியான வேலையை செய்கிறார் கண்ணம்மா.
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘மெட்டி ஒலி’ நடிகை பம்பாய் ஞானம் – ரசிகர்கள் உற்சாகம்!
இப்படிப்பட்ட ஸ்வாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த ஒரு சில வாரங்களாக கண்ணம்மாவாக நடித்து வருபவர் நடிகை வினுஷா தேவி. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன், சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகியதையடுத்து அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் இந்த சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்பட ரிலீஸ் தேதி – அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா, ரோஷினியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, கடந்த கால நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இதனுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய நடிகர் அகிலன், காவ்யா, ரோஷினி, ஸ்வீட்டி ஆகியோரும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நிலையில் இவர்களையும் மிஸ் செய்து வருவதாக சிலர் குறிப்பிட்டிருக்கின்றனர்.