முல்லைக்கு ஆறுதல் சொல்லும் கதிர், பாக்கியா வீட்டுக்கு செல்ல தயாராகும் குடும்பம் – இன்றைய எபிசோடு!

0

முல்லைக்கு ஆறுதல் சொல்லும் கதிர், பாக்கியா வீட்டுக்கு செல்ல தயாராகும் குடும்பம் – இன்றைய எபிசோடு!

நீண்ட நாட்களாக குழந்தைக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கும் முல்லை இப்போது குழந்தை பிறக்காது என்று தெரிந்ததும் வருத்தப்பட கதிர் உட்பட மற்ற அனைவரும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்துகிறார்கள். பிறகு அனைவரும் குடும்பமாக பாக்கியா வீட்டுக்கு செல்ல தயாராகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பல்வேறு பாசப்போராட்டங்களுடன் அரங்கேறி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இப்போது குழந்தைக்காக ஏங்கும் முல்லை சிகிச்சைக்கு பிறகு குழந்தை இல்லை என்று தெரிந்ததும் வருத்தப்படுகிறார். இதனால், மொத்த குடும்பமும் சேர்ந்து அவரை ஆறுதல்படுத்துகிறது. மறுபக்கத்தில், ரூமில் வைத்து கதிருடன் பேசிக்கொண்டிருக்கும் முல்லை இதற்கு பிறகு எதற்கு மாத்திரை சாப்பிட வேண்டும். நேற்று வரைக்கும் குழந்தை இருக்கிறது என்று மாத்திரை சாப்பிட்டேன். இன்றைக்கு எதற்காக சாப்பிட வேண்டும் என்று விரக்தியுடன் பேச அவரை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார் கதிர்.

இதயத்தை தானமாக கொடுக்க ஒப்புக்கொள்ளும் ஆயிஷாவின் பெற்றோர், கண்ணம்மாவை வாழ்த்தும் விக்ரம் – இன்றைய எபிசோடு!

இப்போது, குழந்தை பிறக்காதது உங்களுக்கு வருத்தமாக இல்லையா என முல்லை கேட்க, வருத்தம் இருக்கிறது. ஆனால் உன்னை பார்த்தால் தான் எனக்கு கவலையாக இருக்கிறது. நமக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. நீ ஆசைப்படுவது எல்லாம் நடக்கும். அது நடந்தாலும், நடக்காவிட்டாலும் நான் உன் கூடவே இருப்பேன் என கதிர் நம்பிக்கை கொடுக்கிறார். பிறகு, மறுநாள் காலையில் முல்லை மற்றும் கதிரை பற்றி மூர்த்தி விசாரித்து கொண்டிருக்க மீண்டும் IVF சிகிச்சையை ஆரம்பிக்கலாமா என்று ஜீவா கேட்கிறார். அப்போது, உனக்கு அது அவ்வளவு ஈஸியா இருக்கா.

முதல் முறை செலவு செய்ததற்கே பல லட்சம் செலவானது. இப்போது அடுத்த சிகிச்சையை உடனடியாக செய்ய நம்மிடம் பணம் இருக்கா என மீனாவும், ஐஸ்வர்யாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதனை கதிர் கேட்டு விடுகிறார். மறுபக்கத்தில், முல்லையிடம் பேசும் தனம் உன்னை போல தான் நானும். நீ கல்யாணம் ஆகி 3 வருடம் கழித்து இந்த பிரச்சனையை சந்திக்கிறாய். ஆனால் நான் 15 வருடங்கள் இதை அனுபவித்தேன். எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று நீ நினைக்கலாம். ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு அது தெரியாது. எல்லாரும் பலவிதமாக பேசுவார்கள்.

நீ இப்படி அமைதியாக, வருத்தமாக இருந்தால் அது கதிரையும் பாதிக்கும். நமக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதை வெளியே காட்டக்கூடாது. எல்லாரும் வெளியே போய் விட்டு வீட்டுக்கு வரும் போது அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும். நமக்கு இருக்கும் பிரச்சனையை நம்மோடு வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக இருப்பார்கள் என அட்வைஸ் செய்கிறார். அதே போல தனம் சொன்னது சரிதான் என்று மீனாவும் சொல்கிறார். அதனால், இனி முல்லை சந்தோஷமாக, ஜாலியாக இருக்க வேண்டும் என ஐஸ்வர்யாவும் சேர்ந்து முல்லையை உற்சாகப்படுத்துகிறார்.

மறுபக்கத்தில், முல்லையை சந்திக்க வரும் முருகனும் அதே விஷயத்தை சொல்ல முல்லை ஓரளவுக்கு சமாதானம் ஆகிறார். அடுத்து, வீட்டில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க பாக்கியா போன் செய்த விஷயத்தை சொல்கிறார் தனம். உடனே கண்ணன், ஐஸ்வர்யா, மீனா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் ராமமூர்த்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு போகலாம் என்று சொல்ல மூர்த்தியும் யோசித்து விட்டு பின்னர் ஒப்புக்கொள்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!