கரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் இடங்களில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
உலக நாடுகளை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த பராமரிப்பு பணிகளுக்கான காரணங்களாக, மின் கம்பிகளை சரி செய்வது மற்றும் வயர்களின் மேல் அங்கங்கே உயரமாக வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவது போன்றவை ஆகும்.
இந்நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதிகளை சுற்றியுள்ள மக்கள் சுதாரிப்புடன் முன்னரே தங்களது வேலைகளை செய்து முடித்துக் கொள்ளுமாறு மின் வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரூர் மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ராச்சாண்டார் திருமலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்ன பனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்