பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு தகவல்!
கர்நாடகா மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் இது குறித்த ஆலோசனை மேற்கொண்ட பிறகு அறிவிக்கப்படும் என துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஸ்வத்நாராயண் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வந்ததை அடுத்து மாநிலங்கள் தோறும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்க காலத்தில் கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தமிழக தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் சி.என்.அஸ்வத்நாராயண், ‘கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் அடிப்படையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முதல் கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
2 குழந்தைகள் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை – மாநில அரசு தகவல்!
இருப்பினும், இது குறித்து மாநில அரசு எவ்வித முடிவும்எடுக்கவில்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்’ என கூறியுள்ளார். இதற்கிடையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளாக அலுவலகங்கள் அனைத்தும் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அலுவலகத்துக்கு செல்வது என்பது மக்கள் விருப்பமாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.