தமிழக தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கல்லூரி கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த அடிப்படையில் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் குறைந்து வருகிறது.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணைய (TNPSC) புதிய செயலர் – உமா மஹேஸ்வரி நியமனம்!
அதே நேரத்தில் தற்போது 2021-22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு இணைய வழியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் பின் பேசிய அமைச்சர் அவர்கள் tngptc.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூன் 26 மின்தடை!
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதிக்கு பின்னர் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும் என்று கூறினார். மேலும் உயர் நீதிமன்றம் உத்தரவின் படி தனியார் கல்லூரிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டால் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.