கொரோனா கட்டுப்பாடுகள் திருத்தி அமைப்பு – தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை திருத்து அமைத்து கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது சில பகுதிகளில் நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதில் கேரள மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்பவர்களுக்கு பல்வேறு விதிகள் அமலில் உள்ளன.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்! பள்ளிகள் மூடப்படுமா?
கர்நாடகத்திற்குள் உள்நுழைவோரை பாதுகாக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவில் பல்வேறு திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் துணைவா்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு – இன்றைய நிலவரம்!
விமானம், ரயில், சாலை வழியாக கர்நாடகம் வரும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குடும்பத்தில் இறப்பு அல்லது மருத்துவ சிகிச்சை அல்லது 3 நாள்களுக்குள் திரும்பும் பயணிகள், தோ்வெழுதிவிட்டு 3 நாள்களுக்குள் திரும்ப வரும் மாணவர்கள், அவர்களுடன் வரும் ஒரு பெற்றோா் முதலியவர்களுக்கும் தனிமைபடுத்துதலில் விளக்கு அளிக்கப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும், 72 மணி நேரத்திற்கு முன்னாள் எடுக்கப்பட்ட ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.