‘மீராவின் அப்பா உயிர் பிழைக்க மாட்டார்’ என கூறிய சாமியார் – “கண்ணான கண்ணே” ப்ரோமோ!
சன் டிவியில் தற்போது பல வித பாச போராட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “கண்ணான கண்ணே” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“கண்ணான கண்ணே” சீரியல்
சன் தொலைக்காட்சியில் தந்தை மற்றும் மகள் இருவருக்குமான பாச போராட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “கண்ணான கண்ணே”. இந்த சீரியலின் நாயகி மீரா, யுவா என்பவரை காதலிக்கிறார். அவரும் இவரை காதலிக்கிறார். தனது தந்தை தன்னிடம் காட்டாத தந்தை பாசத்தினை யுவா தன் மீது காட்டியதால், மீராவிற்கு யுவா மீது மிகவும் அதிக அளவில் அன்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், விதிவசத்தால் மீராவின் தந்தை தனது இரண்டாவது பெண்ணான ப்ரீத்திக்கும், யுவாவிற்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.
அர்ஜுனை சுட்ட போலீசார், ரோஜாவை ஆள் வைத்து அடித்த சாக்ஷி – ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!
தனது ஏமாற்றத்தினை மறைத்து கொள்ளும் மீரா தனது தந்தை மற்றும் தங்கைக்காக தனது காதலை விட்டு கொடுக்கிறார். இதனை ஒரு கட்டத்தில் அறிந்து கொள்ளும் ப்ரீத்தி, திருமணத்தை நிறுத்தி விடுகிறார். இதனால் யுவா மற்றும் மீரா இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். தனது இரண்டாவது பேச்சினை மீறி திருமணத்தை நிறுத்தியதால் அவர் மீது கட்டுக்கடங்காத கோபத்தில் அவரது தந்தை இருக்கிறார். அதனால் விஷத்தினை அருந்தி விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த சூழலில் இன்றைக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மீரா, தனது தாய் மற்றும் தங்கையுடன் கோவிலுக்கு செல்லுகிறார். அங்கு இவர்களது பிரச்சனைகளை மந்திரவாத பெண் ஒருவரிடம் கூறுகின்றனர். மீராவின் அம்மா, தனது பிள்ளைகள் மற்றும் கணவர் நன்றாக வாழ வேண்டும் என்றும், தனது கணவர் உயிர் பிழைத்து வர வேண்டும் என்று வேண்டுகிறார். அதற்கு அந்த சாமியார் ‘அது நடக்காது’ என்று கூறி விடுகிறார். இதனால் மீரா, ப்ரீத்தி மற்றும் இவர்களது அம்மா அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.