கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம் – இறுதி சடங்குகள் எப்போது?
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கிற்கான விசாரணை இன்று நடைபெற்றது. மாணவியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாணவி மரணம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மனைவி ஜூலை 13 ம் தேதி மரணம் அடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர் தரப்பில் போராட்டங்கள் மேற்கொண்டனர். போராட்டங்கள் கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். முதல் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. இந்த நிலையில் பரிசோதனையில் சந்தேகம் இருக்கின்றது என்றும் இரண்டாம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.சென்னை உயர் நீதிமன்றம் மனுவை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகி இன்றாவது மாணவியின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து ஸ்ரீமதியின் மரண வழக்கில் 3 மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். மாணவியின் தந்தை தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது விட்டது. இதையடுத்து மாணவியின் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு முடிவடைந்தது. ஆயினும் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். சடலத்தை வாங்க பெற்றோருக்கு உத்தரவிடும்படி அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிபதி சதீஷ்குமார் முன்பாக முறையீடு செய்தார்.
ரேஷன் பொருட்கள் இனி கிடையாது – வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!
மாணவியின் தந்தை தரப்பில் நீதிபதியின் முன்னாள் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு கோரிக்கைகளையும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய போவதில்லை என தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், விசாரணையை இன்று வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார். பெற்றோர் தரப்பில் மாணவியின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் சடலத்தை பெற்று கொள்ளுமாறு மாணவியின் வீட்டில் இரண்டு முறை நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இன்று மாணவியின் சடலம் சொந்த ஊரான பெரிய நெசனூர் கொண்டுவரப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.