ரேஷன் பொருட்கள் இனி கிடையாது – வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!
ரேஷன் பொருட்கள் பலவும் தகுதியில்லாதவர்களுக்கே சென்றடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், குறிப்பிட்ட வசதியுடையவர்களுக்கு இனி ரேஷன் கார்டு கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், மாநில அரசு வழங்கும் இந்த அனைத்து சலுகைகளையும் இந்த ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
Exams Daily Mobile App Download
அதே நேரத்தில் பலரும் ரேஷன் பொருட்களை வாங்கி அதனை உபயோகப்படுத்தாமல் கள்ளசந்தையில் விற்பனை செய்கின்றனர். இதனால், உண்மையாகவே ரேஷன் பொருட்களால் வாழ்ந்து வரும் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால், தகுதியுடைவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் சென்றடைய வேண்டும் எனவும், தகுதியற்றவர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு ரேஷன் கார்டு விதிமுறைகளை சற்று மாற்றியமைத்துள்ளது.
கழிவுநீரில் பரவும் கொரோனா வைரஸ் ஓமிக்ரான் தொற்று – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
அதாவது, ரேஷன் கார்டு வைத்திருப்போரின் குடும்ப வருமானம், வசதி ஆகிவற்றை பொறுத்து தான் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால், தகுதியானவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு பெரிய வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர்கள், வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் ஆயுத உரிமம் பெற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.