கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – எஸ்.பி. பகலவன் முக்கிய அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக பல வதந்திகள் சமூக வலை பக்கங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இது போன்ற வதந்திகளை பரப்பும் சமூக வலை பக்கங்கள் முடக்கப்படும் என எஸ்.பி. பகலவன் அறிவித்துள்ளார்.
தற்கொலை விவகாரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தையே பெரிய அளவில் உலுக்கியுள்ளது. மேலும், மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் தான் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில் பள்ளியை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சூறையாடிவிட்டனர். அதாவது, பள்ளியில் இருந்த அனைத்து உடைமை பொருட்களையும் அடித்து உடைத்து நாசமாக்கி மொத்த பள்ளியையும் சிதைத்துவிட்டனர்.
Exams Daily Mobile App Download
மேலும், அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் தீயிட்டு கொளுத்தி மாணவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிட்டனர். இதனை தொடர்ந்து அதே பள்ளியில் தான் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால் பள்ளியை சீரமைக்கும்பணி வெகுவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், தீயில் எரிந்து நாசமாகிய அனைத்து மாணவர்களின் சான்றிதழும் கூடிய விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ‘இந்த’ கட்டணம் இல்லை!
இது மட்டுமல்லாமல் மாணவியின் தற்கொலை குறித்து சமூக வலை பக்கங்களில் அதிகமாக வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இதனால், டிவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலை பக்கங்களில் கண்காணிக்கும் பணி தீவிரமாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், மாணவியின் தற்கொலை குறித்து வதந்திகள் பரப்பினால் அந்த குறிப்பிட்ட சமூக வலை பக்கம் முடக்கப்படும் என எஸ்.பி. பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதனை கண்காணிக்கவே தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.