கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் – பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளி வளாகத்தில் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்களில் சிலர் மேஜை, இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர்.
காவல்துறையினர் எச்சரிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி உயிரிழந்துள்ளார். இவர் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு செய்ததில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாணவியின் இறப்பில் மர்மம் உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மறுபிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனைக்கு அனுமதி வழங்கியது. இதன் பேரில் உடற்கூறு ஆய்வு முடிந்து மாணவியின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பொதுமக்களும், மாணவியின் உறவினர்களும் கிட்டத்தட்ட 5 நாட்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பள்ளி பேருந்தை அடித்து நொறுக்கியும் பேருந்திற்கு தீ வைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூரில் MTIPB நிறுவன வேலைவாய்ப்பு – மத்திய அரசு வேலை || டிகிரி தேர்ச்சி போதும் !
இந்த வன்முறையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அப்பள்ளியில் இருந்த மேஜை, இருக்கைகள், ஏ.சி. இயந்திரங்கள், மின் விசிறிகள், ஏர் கூலர்கள், கணினி போன்ற பொருட்களை எடுத்து சென்றனர். தற்போது இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கலவரம் தொடர்பான வழக்கில் பொருட்களை எடுத்தவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று தண்டோரா மூலமாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் 9,10,12 வகுப்புகளை வேறு தனியார் பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் 2 மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் வகுப்புகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.