பிரசவ அறையில் காஜல் அகர்வால் அனுபவித்த திக் திக் நிமிடங்கள் – அவரே வெளியிட்ட பதிவு!
தற்போது காஜல் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ரசிகர்கள், திரை பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேளையில் தற்போது காஜல் பிரசவ அறையில் நடந்த தருணங்கள் குறித்து கூறியுள்ளார்.
பிரசவ அறையில் காஜல்:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபரான கவுதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு காஜல் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி காஜல் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும், நண்பர்களும் காஜலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது காஜல் குழந்தையுடன் இருக்கும் அழகிய தருணம் குறித்து டிவீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ExamsDaily Mobile App Download
அதாவது, ஒரு பெண் தாய்மையடைவது போன்ற ஒரு அற்புதமான நிகழ்வு இவ்வுலகில் எதுவுமே கிடையாது. குழந்தை பிறந்து முதன் முதலில் குழந்தையை கையில் கொடுத்த அந்த தருணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லவே முடியாது. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். எனது குழந்தை பிறந்த பிறகு தான் காதல் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டேன். அழுகை, பயம், வலி என அனைத்தும் கலந்த உணர்வை முதன் முறையாக எனது பையன் நீல் மூலமாக உணர்ந்தேன். பிரசவத்தின் போது மிகவும் பயந்தேன். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வரைக்கும் கூட தூங்காமல் இருந்தேன்.
மீண்டும் புதுப்பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ – 90’s கிட்ஸ்களுக்கு ஹாப்பி நியூஸ்!
காலையில் எழுந்து எனது குழந்தையின் அழுகுரல் கேட்கும் போதெல்லாம் அவ்வளவு புத்துணர்வாக இருக்கிறது. எப்படி இந்த பிரசவத்தை கையாள போகிறேன் என மிகவும் பயத்தில் இருந்தேன். ஆனால், எவ்வளவு பயம் இருந்தாலும் கூட எனது குழந்தையின் முகத்தை பார்க்கவே இத்தனை மாதங்களாக காத்து கொண்டிருந்தேன். தற்போது எனது பையனுடன் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் என்ஜாய் செய்து கொண்டிருக்கிறேன் என கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.