தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு – முகக்கவசம் அணிவது கட்டாயம்!
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் பணிக்கு செல்ல வேண்டும் என அரசின் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உலகம் முழுவதும் அதிகமாக இருந்து வந்தது. பல அப்பாவி மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனர். மக்களின் நலனில் அக்கறை கொண்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு செல்ல வேண்டும் எனவும், அப்படி வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Mega Test Pack ஆரம்பம்!
மேலும், பொது மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் சுதந்திரமாக தங்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில், தலைநகரான டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம்போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில், பல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாள்தோறும், 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்லும்படியும், மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் பணிக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.