ஜூன் 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முடிவு!
இந்தியாவில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் கொரோனா நான்காவது அலை அச்சத்திற்கு மத்தியில், மும்பை உள்ளிட்ட பிற மகாராஷ்டிரா நகரங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 1,000க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இப்போது மாநிலத்தில் நிலவும் கொரோனா நான்காவது அலை அச்சத்திற்கு மத்தியில், மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூன் 15ஆம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – மதிப்புமிக்க 3 வீரர்கள் இவர்கள் தான்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்கள் முழுமையாக பள்ளிகளுக்கு செல்லவில்லை. ஆனால், இப்போது ஜூன் 15 முதல் 1 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசங்களை அணிவது கட்டாயமில்லை என்றாலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் தானாக முன்வந்து அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதே நேரத்தில் ஏதேனும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 1,000க்கும் மேற்பட்ட கொரோனா புதிய வழக்குகள் பதிவாகி வருகிறது. குறிப்பாக, மும்பை மாநகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்சமாக 933 புதிய வழக்குகள் செயலில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.