மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.2000 தவணைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பிரதமரின் PM kisan சம்மன் நிதியுதவி திட்டத்தின் மூலமாக 11 ஆவது தவணைக்கான நிதியுதவி சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், சில விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி கிடைக்கவில்லை என்பதால் அந்த நிதியுதவியை எப்படி வாங்குவது என்பது குறித்தான முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PM KISAN திட்டம்:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் பிரதம மந்திரி விவசாயிகள் திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 2000 வீதம் நிதியுதவி வாங்கி பயனடைந்து வருகின்றனர். தற்போது வரைக்கும் PM -kisan திட்டத்தின் மூலமாக 10 தவணைகளில் விவசாயிகள் நிதியுதவி வாங்கி பயன் அடைந்துள்ளனர். இதில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11 ஆவது தவணைக்கான நிதியுதவியையும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமரின் இந்த புதிய திட்டத்தின் மூலமாக 10,000 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ஜூன் 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முடிவு!
இதனிடையே சில விவசாயிகளுக்கு இந்த பிரதமரின் கிசான் திட்டத்தின் 11வது தவணைக்கான பணம் வந்து சேரவில்லை என புகார் எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை எனில் உடனடியாக மத்திய வேளாண் அமைச்சகத்திடம் புகார் கொடுக்கலாம் அல்லது உங்களது பகுதியில் உள்ள கணக்காளர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். விவசாயிகளின் புகார்களை கேட்டறியவே திங்கள் முதல் வெள்ளி வரை pm-kisan ஹெல்ப் டெஸ்ட் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் வங்கிக் கணக்கிற்கு இந்த நிதியுதவி வந்து சேராமல் இருக்கலாம். இதனால் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் உழவர் நல பிரிவிற்கு தொடர்பு கொண்டு இதற்கான தீர்வை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 011-23381092 என்கிற தொலைபேசி எண் மூலமாக அல்லது [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் இதற்கான தீர்வை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.