TNPSC தேர்வாணையம் வெளியிட்ட இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு பொறியியல் சார்ந்த பணிகளுக்கான சி.இ.எஸ்.இ. தேர்வை நடத்துகிறது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி
கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்றின் விளைவாக பணிக்கு ஆட்களை அமர்த்தப்படவில்லை. அதனால் இந்த வருடம் 590 க்கும் மேற்பட்ட காலியாக உள்ள ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், உதவி பொறியாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், ஜெனரல் ஃபோர்மேன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்த பொறியியல் பிரிவு மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு ஷிப்டுகளில் 26 ஜூன் 2022 அன்று தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காலிப்பணியிட விவரங்கள்:
மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் ஆட்டோமொபைல் பொறியாளர் பணிக்கு 4 பணியிடங்களும் ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் பணிக்கு 8 பணியிடங்களும்,உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) – 66மற்றும்உதவி பொறியாளர் (சிவில்) பணிக்கு 308, ஜெனரல் ஃபோர்மேன் பணிக்கு 7, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 11, உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை) பணிக்கு 93 காலியிடங்கள் உள்ளன.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(அல்லது) ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான அலுவலக நிர்வாகத்திலும் பணியாளராக நிர்வாகத்திலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !
சம்பள விவரங்கள்:
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பணிக்கு ரூ.56,100 முதல் 2,05,700 வரையும், AE – ரூ.37,700 முதல் 1,38,500 வரைக்கும் சம்பளம் கொடுக்கப்படும். மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியருக்கு 37 வயது வரையும் மற்றவைக்கு 32 வயது வரையும் வயது இருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.