Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த நேரத்தில் வேலை இழந்த மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை பொறுத்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மற்ற துறைகளை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறை வேலை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கார் டிரைவர் பணியிடத்தில் தற்போது 16 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரது வயது 56 க்குள் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அஞ்சல் துறையில் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கான திறனை மதிப்பிடுவதற்கு வர்த்தக ஓட்டுநர் சோதனையின் அடிப்படையில் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் பொறிமுறை பற்றிய அறிவு வேண்டும். அத்துடன் கல்வி தகுதி 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஓய்வு பெறும் ஆயுதப் படைப் பணியாளர்கள் ஒரு வருட காலத்திற்குள் இடஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட வேண்டியவர்கள் போன்றோர்களும் விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கடைகளில் உள்ள காலிபணியிடம் நிரப்பல் – தீர்மானம் நிறைவேற்றம்
மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து O/o the Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road Chennai – 600 006 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hi
Hi