தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவிப்பட்டி அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு சேர விருப்புவோர்கள் டிசம்பர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆயுள் காப்பீடு முகவர்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வரும் நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அரசு முன் வந்துள்ளது. அந்த வகையில் தனியார் துறைகள் அவ்வப்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தவறாது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த ஏராளமான இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
அரசு மற்றும் தனியார் துறைகளை தொடர்ந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வேலைவாய்ப்பற்றோர், சுயதொழில் புரிவோர், முன்னாள் காப்பீட்டு முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், கிராம தலைவர், கிராம சபை உறுப்பினர், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 வது இடம்-வெள்ளி வென்றார் கிடாம்பி!
இப்பணிக்கு பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் ஆயுள் காப்பீடு முகவர் 5 ஆயிரம் ரூபாய் காப்பீடு தொகையை சேமிப்பு பத்திர வடிவில் அஞ்சலகத்தில் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பெற்று டிசம்பர் 27ம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம் – 628 501 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் அனுப்ப வேண்டும் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.