தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ஆணை – பயனாளிகள் மகிழ்ச்சி!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுப்படி ஆணை - பயனாளிகள் மகிழ்ச்சி! (1)
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுப்படி ஆணை - பயனாளிகள் மகிழ்ச்சி! (1)

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ஆணை – பயனாளிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து கடந்த ஆண்டு சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது தமிழகத்தில் பல இடங்களில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த முறைகேடுகளில் வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாரதி கண்ணம்மா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கண்மணி? அவரே அளித்த விளக்கம்!

மேலும் இதில் போலி நகைகளை கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. அதனால் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இதில் தள்ளுபடி பெற தகுதியானவர்களின் பட்டிலை தயாரிக்க வேண்டும் அவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 48 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் நகைக்கடன் தள்ளுபடி விண்ணப்பித்தவர்களில் 13 லட்சத்து 30 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே தள்ளுபடி பெற தகுதியான நபர்கள் என்று பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 18ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கெலமங்கலம் அடுத்த நாகமங்கலத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணை இன்று வழங்கப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடிக்கான ஆணையை பெற்ற பயனாளிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!