சென்னை: இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நகைகள் வாங்குவதில் மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தங்கம் விலை:
உலகில் ஆசிய நாடுகளில் தான் அதிக அளவு தங்கம் மற்றும் தங்கத்தால் ஆன அணிகலன்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் சீனா மற்றும் இந்தியா ஆகிய 2 நாடுகளில் தங்கத்தின் இறக்குமதி அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காரணமாக இந்த இரு நாடுகளிலும் தங்க இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் கொரோனா பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, ஊரடங்கு, சர்வதேச விமான தடை போன்ற நடவடிக்கைகள் காரணமாகவும் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது.
அதே நேரம் பங்கு சந்தை சரிவடைவதால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். இதன் காரணமாகவும் தங்கம் விலை ஏற்றம் காணத் தொடங்கியது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியது. இதன் விளைவாக தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3800 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் சவரன் ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனையானது.
ஆதார் எண் மூலமாக வங்கி பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாமா? எளிய வழிமுறைகள்!
ஆனால் இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 401 உயர்ந்து ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கம் ரூ. 5 உயர்ந்து ரூ.4,730க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் அதிகரித்து ரூ.59.50-க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.59,500-க்கும் விற்பனையாகி வருகிறது. நேற்றை ஒப்பிடும் போது இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்