ஆதார் எண் மூலமாக வங்கி பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாமா? எளிய வழிமுறைகள்!
தற்போது மூத்த குடிமக்களுக்காக ஆதார் எண் மூலமாகவே இன்டர்நெட் சேவை இல்லாமல் வங்கியின் பேலன்ஸ் தெரிந்து கொள்ளும் படியான ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எப்படி ஆதார் எண் மூலமாக வங்கி பேலன்ஸ் சரி பார்ப்பது என்பது தொடர்பான முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி பேலன்ஸ்:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு தான் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதாவது ஆதார் அட்டைகள் மூலமாகவே பல சேவைகளை மத்திய மாநில அரசுகள் குடிமக்களுக்கு வழங்கி வருகின்றன. ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவதில் இருந்து வங்கிக்கணக்குகள் வரைக்கும் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டுடன் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. தற்போது ஆதார் அட்டைகள் மூலமாக மற்ற சேவைகளையும் மத்திய மாநில அரசுகள் குடிமக்களுக்கு வழங்கியுள்ளது.
அதாவது ஆதார் அட்டைகள் மூலமாக இன்டர்நெட் சேவை இல்லாமலேயே தொலைபேசிகளில் வங்கிகளில் இருக்கும் இருப்புத் தொகையை சரி பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய திட்டம் ஸ்மார்ட்போன் அல்லாத மற்றும் இணைப்பு சேவை வழங்கப்படாத மொபைல் வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி ஆதார் எண் மூலமாக வங்கி கணக்கை சரிபார்ப்பது என்பதை பார்க்கலாம்.
முதலில், வங்கியின் இருப்புத் தொகையை சரிபார்க்க வேண்டும் என்றால் ஆதார் அட்டையை கட்டாயமாக வங்கிக் கணக்குடன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து *99*99*1# என டைப் செய்யவும். பின்னர் ஆதார் எண்ணான 12 இலக்க எண்ணை டைப் செய்து ஒருமுறை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உங்கள் மொபைலுக்கு வங்கியின் இருப்பு தொகை காண்பிக்கப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்