JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் நாளை (செப். 17) வெளியீடு – வெளியான தகவல்!
மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான JEE அட்வான்ஸ் AAT தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான முடிவுகள் நாளை ( செப். 17) வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
JEE அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள்:
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பாம்பே கூட்டு நுழைவுத் தேர்வை 2022 ஆம் ஆண்டு நடத்தியது. இந்த தேர்வானது நாடு முழுவதும் செப்டம்பர் 14 அன்று நடைபெற்றது. ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வானது காரக்பூர் மற்றும் ரூர்க்கியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐஐடி) இளங்கலை கட்டிடக்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். IIT-களில் இளங்கலை, கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும்.
இந்நிலையில் JEE அட்வான்ஸ் AAT தேர்வு முடிவுகள் நாளை செப் 17 வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக NTA தேர்வு நடந்து முடிந்து 8 முதல் 10 நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாக தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. JEE Advanced முடிவை தேர்வர்கள் jeeadv.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். முடிவுகளை தெரிந்து கொள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடந்துவிடும் என்ற பயமா? இனி கவலை இல்லை.. இதை மட்டும் செய்யுங்க!
Exams Daily Mobile App Download
இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர்கள், உலக தரத்திலான சோதனை கூட வசதிகள் இருக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க, இந்த ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வழிகாட்டுகிறது. மேலும் பிளஸ்-2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடம் பயின்றவர்கள் யார் வேண்டுமானாலும், தமிழ் உள்பட 13 விருப்ப மொழிகளில் இந்த தேர்வினை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிகாரப்பூர்வ வலைத்தளம்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்