கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடந்துவிடும் என்ற பயமா? இனி கவலை இல்லை.. இதை மட்டும் செய்யுங்க!

0
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடந்துவிடும் என்ற பயமா? இனி கவலை இல்லை.. இதை மட்டும் செய்யுங்க!
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடந்துவிடும் என்ற பயமா? இனி கவலை இல்லை.. இதை மட்டும் செய்யுங்க!
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடந்துவிடும் என்ற பயமா? இனி கவலை இல்லை.. இதை மட்டும் செய்யுங்க!

இந்தியாவில் மக்கள் தற்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் பெரும்பாலானோர் வங்கி செல்வதை தவிர்த்து ஏடிஎம் இயந்திரம் மூலம் கார்டை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்க்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரெடிட், டெபிட் கார்டு:

இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகளை கிரெட்டி கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவே பணம் செலுத்துவது அதிகமாகி உள்ளது. அதே நேரம் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடப்பது அதிகரித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

மேலும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பண இழப்பை தடுக்க ஏடிஎம் இயந்திரங்களில் 10,000க்கும் மேல் பணம் எடுக்கும் போது OTP எண் பதிவிடும் முறையை கொண்டு வந்தது. இந்த முறையில் 10,000 எடுக்க முயற்சிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிட்டால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதன் தொடர்ச்சியாக தற்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளை தவிர்க்க கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இவர்களுக்கும் கட்டாயம் ஊதிய உயர்வு வேண்டும் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!!

Exams Daily Mobile App Download

இந்த புதிய முறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதாவது டோக்கனைசேஷன் என்பது கார்டு விவரங்களை “டோக்கன்” எனப்படும் மாற்றுக் குறியீடுக்கு மாற்றுவதாகும். இதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும். இதில் நன்மை என்னவென்றால் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பற்றிய தனிப்பட்ட தகவல்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சேமித்து வைக்க முடியாது. அதனால் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோர் இந்த டோக்கனைசேஷன் முறையை பின்பற்றுவது சிறந்தது. இதனை பெற வாடிக்கையாளர்கள் வங்கியிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!