தமிழகத்தில் இவர்களுக்கும் கட்டாயம் ஊதிய உயர்வு வேண்டும் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!!
தமிழகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை முன்பிருந்து சரி செய்து வந்த முன்களப்பணியாளர்களில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்கள் இன்னுயிரை பெரிது படுத்தாமல் பல ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பெருந்தொற்று காலத்தில் பணியாற்றினார்கள். இதனால், பல நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நடந்தது. இந்நிலையில், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நோய் தொற்று அதிகம் பாதித்த மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விரைவாக பாதிப்பு கட்டுக்குள் வருவதற்கு தமிழக மருத்துவர்களே முக்கிய காரணமாக இருந்தார்கள். இவர்கள் அடிப்படை உரிமைகளை அரசு அலட்சியம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009 இன் படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். இதனை கடந்த ஆட்சி காலத்தில் தான் அரசு செய்யத் தவறி விட்டது.
NBEMS தேர்வு அட்டவணை வெளியீடு – முழு விவரங்களும் உள்ளே!
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போதைய அரசு இதற்கான வாக்குறுதியை மருத்துவர்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த பின் செய்யாமல் இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் அரசு மருத்துவர்களின் ஊதியத்தை அரசு விரைவில் உயர்த்த வேண்டும். ஏற்கனவே பலமுறை அரசு மருத்துவர்கள் இதற்காக போராட்டங்களை நடத்தி உள்ளனர். மேலும், வரும் செப்டம்பர் 28ம் தேதியும் உண்ணாவிரத போராட்டங்களை ஊதிய உயர்வை கோரி நடத்த உள்ளனர். இதில், தானும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்