அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – தொடர் விடுமுறை நாட்களின் பட்டியல்!
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு இம்மாதம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் விடுமுறைக்குள் அவசிய பணிகளை முடித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
விடுமுறை:
இந்தியாவில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வருகிறது. தலைமை ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையியல் தற்போது விடுமுறை குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வங்கி விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. அதில் சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 காந்தி ஜெயந்தி- அக்டோபர் 2, கிறிஸ்துமஸ் தினம் – டிசம்பர் 25 ஆகிய அரசு விடுமுறை நாட்கள் மட்டும் ஒன்றாக இருக்கும். அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இன்று பணிமாறுதல் கலந்தாய்வு!
மற்றபடி ஒவ்வொரு மாநிலங்களிலும் பண்டிகைகள் மாறுபடுவதால் இந்த விடுமுறையும் வேறுபடுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இந்த விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி பணிகளை உடனடியாக முடித்து கொள்ளவும். ரிசர்வ் வங்கியின் தற்போதைய விடுமுறை பட்டியலில் ஜனவரி இரண்டாம் பாதியில் இருந்து விடுமுறை வரவுள்ளது.
வங்கி விடுமுறை நாட்கள்:
- 22.01.2022 – நான்காவது சனிக்கிழமை
- 23.01.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
- 26.01.2022 – குடியரசு தினம் அரசு விடுமுறை (இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை)
- 30.01.2022 – ஞாயிறு விடுமுறை