தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இன்று பணிமாறுதல் கலந்தாய்வு!

0
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - இன்று பணிமாறுதல் கலந்தாய்வு!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - இன்று பணிமாறுதல் கலந்தாய்வு!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இன்று பணிமாறுதல் கலந்தாய்வு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு இன்று (ஜன.19) தொடங்கவுள்ளது. தொடர்ந்து 4 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.32,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க பிப்.28 கடைசி நாள்!

இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1,138 பள்ளிகள் இயங்கி வரும் பள்ளிகளில் சுமார் 630 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களை பணியமர்த்த டிசம்பர் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 271 ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். அதனை தொடர்ந்து விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், ஆசிரியர் ஆகியோருக்கான பணி மாறுதல் கலந்தாய்வு ஜனவரி 7ஆம் தேதி தொடங்கவிருந்தது. மேலும் ஜன.11 வரை கலந்தாய்வு நடைபெறவிருந்தது.

மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!

கடந்த வாரங்களில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் தீவிரமெடுத்ததால் ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு இன்று முதல் (ஜன 19) தொடங்கவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்ட அளவிலேயே இன்று இணையவழியில் நடக்கவுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வு தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!