ஜனவரி 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!

0
ஜனவரி 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!
ஜனவரி 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!
ஜனவரி 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!

பஞ்சாப் மாகாணத்தில் ஜனவரி 6 ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திற்கும் நாளை (ஜன.7) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் முராத் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்றின் வேகம் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளை திரும்ப பெற்று வருகிறது. அதாவது, இந்தியாவில் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்ததற்கு பிறகு கொடுக்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் திருப்ப பெறப்பட்டு மக்கள் மீண்டுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை நோக்கி வழிநடத்தப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மீண்டுமாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் விண்ணப்பம், நிலை சரிபார்ப்பு!

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் முராத் அறிவித்துள்ளார். அதாவது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீண்டும் பள்ளிக்கு வரவேற்று, கொரோனா தொடர்பான பொருத்தமான நாடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஜனவரி 6 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பஞ்சாபின் அனைத்து பள்ளிகளும் நாளை (ஜனவரி 7) அன்று மீண்டுமாக திறக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாரத் பயோடெக் முக்கிய அறிவிப்பு!

முன்னதாக கடந்த டிசம்பர் 21 அன்று, பஞ்சாப் அரசாங்கம், குறிப்பாக அதிக அளவு புகை மூட்டம் காணப்பட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தனித்தனியான தேதிகளுடன், திருத்தப்பட்ட குளிர்கால விடுமுறை அட்டவணையை அறிவித்தது. இது குறித்த அறிவிப்பின் படி ஒரு சில இடங்களுக்கு டிசம்பர் 23 முதல் ஜனவரி 6 வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு சில இடங்கள் ஜனவரி 3ம் தேதி முதல் 13 வரை இந்த குளிர்கால விடுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இப்போது இன்றுடன் (ஜன.6) விடுமுறை முடியும் பள்ளிகள் நாளை (ஜன.7) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!