தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பு – டிச.28ம் தேதி ஆலோசனை!

0
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பு - டிச.28ம் தேதி ஆலோசனை!
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பு - டிச.28ம் தேதி ஆலோசனை!
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பு – டிச.28ம் தேதி ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.3ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழுநேர வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு நேர வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டாலும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் மற்றும் கொரோனா நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கு முன் மாணவர்களின் கற்றல் திறனை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த டிச.20ம் தேதி முதல் 24ம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது. அதே போல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு டிச.27 முதல் டிச.31ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில முதல்வர் அறிவிப்பு!

மீண்டும் ஜன.3ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேர்வுக்கான பாடங்கள் நடத்த போதிய காலம் இல்லாததால் வரும் ஜன.3ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பரவி வரும் ஓமிக்ரான் தொற்று காரணமாக வரும் ஜன.3ம் தேதி முதல் முழுநேர வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கை குறித்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் டிச.28ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!