ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில முதல்வர் அறிவிப்பு!

0
ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகள் - மாநில முதல்வர் அறிவிப்பு!
ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகள் - மாநில முதல்வர் அறிவிப்பு!
ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில முதல்வர் அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கூட்டத்தை குறைக்க மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

இரவு ஊரடங்கு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 1,179 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய மூன்று சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் தீவிர கண்காணிப்பு தற்போது டிசம்பர் 1 முதல் நடந்து வருகிறது. இருப்பினும், மகாராஷ்டிராவில் இதுவரை அதிக அளவாக 88 பேருக்கு ஓமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம்! முக்கிய தகவல்!

நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில COVID-19 பணிக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், அதில் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், திருமணங்கள் மற்றும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் விருந்துகளின் போது பொதுக் கூட்டங்களைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பண்டிகை காலத்தில் கூட்டத்தை குறைக்க மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா செய்த சாதனை – டாப் 10 புதுமுக நாயகிகள் பட்டியலில் முதலிடம்!

புதிய வழிகாட்டுதல்கள்:

  • 50 சதவீத மக்கள் மட்டுமே மூடிய இடங்களில் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் திறந்தவெளியில் 25 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • கூட்டங்களில் 6 அடி சமூக இடைவெளி மற்றும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • ஏதேனும் நிகழ்ச்சி/ கூட்டம்/திருமணம்/கூட்டம், செயல்பாடு அல்லது சமூக, மத அல்லது அரசியல் கூட்டங்கள் என இவை அனைத்தும் மூடப்பட்ட இடங்களில் நடந்தால், அந்த இடத்தின் திறனில் 50 சதவீதம் வரை மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • அரசின் வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் அனைவரும் இந்திய தண்டனைச் சட்டம், 1860 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குடிமை அமைப்பு எச்சரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!