ஜன.13ம் தேதி தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் – தமிழக இளைஞர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு முதல் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, அதன் மூலம் பணி நியமனம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களுக்கும் முறையாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வுகள் மூலம் தகுதியான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதேபோல், தனியார் நிறுவனங்களிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உதவி செய்து வருகிறது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
தற்போது திருவள்ளூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஜனவரி 13ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருக்கிறது. 20 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில் 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி போன்ற கல்வி தகுதிகளை பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.