தமிழகத்தில் 2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுக்கடைகள் மூடல்:
தமிழின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்று திருக்குறள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இத்திருக்குறளில் மக்களின் வாழ்விற்கு தேவையான அனைத்து கருத்துகளும் இரண்டு அடிகளில் தொகுத்துரைக்கப்பட்டுள்ளது. உலகம் போற்றும் இந்நூலை எழுதியவர் திருவள்ளுவர் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பனி மூட்டம் – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இவரின் கருத்துக்களை உலக மக்கள் ஏற்றுக் கொண்டதை அடுத்து திருக்குறள் உலக பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என முடிவு செய்து. அதனை தமிழ் ஆண்டாக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து ஆண்டுதோறும் தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஜன.26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.