தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பனி மூட்டம் – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் காலை நேரங்களில் உறை பனிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கடந்த 2022ம் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானது. டிசம்பர் மாத இறுதியில் மழை சற்று தனிய ஆரம்பித்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அத்துடன் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் தென்படுகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பள்ளி திறப்பு – தெலுங்கனா டிஜிபி தொடங்கி வைப்பு!!
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜன. 15ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் உறை பனி சூழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சவெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.