மாநில அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 3 சதவீதம் உயர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 3% உயர்த்தி 34% ஆக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படும். இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்’ என்று குறிப்பிட்டுள்ளர். இதற்கு முன்னதாக ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக கடந்த 2021ஆம் ஆண்டில் அகவிலைப்படி தொகை 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மீண்டுமாக 3 சதவீத உயர்வுடன் 34% அகவிலைப்படி தொகை உயர்வை ராஜஸ்தான் மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நேற்று (ஏப்ரல்.1) முதல் புதிய நிதியாண்டு துவங்கி இருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.