கோபி கழுத்தை நெரித்து எச்சரித்த ராமமூர்த்தி, எழில் மீது காதலில் விழுந்த அமிர்தா – “பாக்கியலட்சுமி” இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அமிர்தாவை கிண்டல் செய்தவனை எழில் அடித்து நொறுக்கி பின் இவங்க என்னுடைய மனைவி எங்களுக்கு குழந்தை இருப்பதாக சொல்கிறார். பின் அமிர்தா எழிலின் அன்பை புரிந்து கொள்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தா தன்னை கிண்டல் செய்தவனை காட்ட எழில் வந்து அவனை அடித்து நொறுக்குகிறார். அவன் பதிலுக்கு அடிக்க வர எழில் அவனை பயங்கரமாக அடிக்கிறார். கடைசியில் இவங்களை யார் என நினைத்தாய் என்னுடைய மனைவி எங்களுக்கு கல்யாணம் முடிந்து குழந்தை இருக்கிறது. என் மனைவியை வம்பிழுப்ப அதை கேட்க வந்த என் அப்பாவை அடிப்பியா என கேட்க இவங்களுக்கு கல்யாணம் ஆகவில்லை என நினைத்ததாக சொல்கிறார். அப்போது கல்யாணம் ஆகாமல் இருந்தாலும் எந்த பெண்ணையும் வம்பிழுக்க கூடாது என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் அமிர்தா எழில் பேசியதை நினைத்து அதிர்ச்சியில் இருக்கிறார். அமிர்தாவிடம் சுற்றி இருப்பவர்கள் இது தான் உன்னுடைய கணவரா ஹீரோ மாதிரி இருக்கிறார் புருஷன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என சொல்கிறார் . அதை கேட்டு அமிர்தாவிற்கு எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் எழில் வீட்டிற்கு வர அப்பாவிடம் எல்லாம் சரியாகிவிட்டது என சொல்கிறார். அப்போது எழில் அப்பா அவங்க எல்லாரும் ரவுடி பசங்க என சொல்ல, எழில் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.
அமிர்தா எழில் பேசுவதை பார்த்துவிட்டு கணேஷ் புகைப்படத்திடம் வந்து எழில் என்னை விரும்புவதாக சொன்ன போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை ஆனால் இப்போது அவரை எனக்கு பிடித்துள்ளது அவர் அருகே இருந்தால் நான் சந்தோசமாக இருக்கிறேன் என சொல்கிறார். நீங்க தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என கேட்க எழில் நான் இருக்கிறேன் அம்மா என சொல்கிறார். பின் கோபி ராதிகா உடன் பேசிக் கொண்டிருக்க, ராமமூர்த்தி வந்து கோபி கழுத்தை நெரிக்கிறார் ஆனால் கோபி அவரை தள்ளிவிட்டு சென்றுவிடுகிறார். பின் பாக்கியா இனியாவிடம் பேச உன் தொல்லை தாங்க முடியவில்லை அதனால் நான் வெளிநாடு சென்று விடுவேன் என சொல்கிறார்.
இனியா நான் டாடி உடன் சென்று விடுவேன் என சொல்ல, நான் வர வேண்டாமா என கேட்கிறார். நீ வேண்டாம் என சொல்ல, என்னை பார்க்காமல் இருப்பியா என கேட்கிறார். இருப்பேன் ஆனால் டாடி இல்லாமல் தான் இருக்கமாட்டேன் என சொல்கிறார். அப்போது பாக்கியா கோவமாக இருக்க இனியா பாக்கியா சமாதானம் செய்கிறார். பின் என் தோழியின் அப்பா அம்மா விவாகரத்து வாங்கிட்டாங்க என சொல்ல, அப்போ அவள் கவலைப்படுகிறாளா என கேட்கிறார். இல்லை சந்தோசமாக இருக்கிறாள் என சொல்ல, நீயும் அப்பாவும் பிரிந்தால் நான் டாடி உடன் சென்றுவிடுவேன் என இனியா சொல்கிறார்