தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பொங்கல் பரிசுடன் கரும்பு! ரூ.71 கோடி ஒதுக்கீடு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்காக கூடுதலாக ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு கரும்பிற்கு ரூ.33 வீதம் தொகை கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.2500 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டிற்கான (2022) பொங்கல் பரிசுத்தொகுப்பில் 20 பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் பொங்கல் பரிசில் ரொக்கப்பணத்தை இணைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரி உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டுக்கு முன் சம்பள உயர்வு – 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மேலும் இம்முறை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.1,088.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.505 வீதம் தொகை கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசில் கரும்பையும் சேர்த்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்காக ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் கூடுதலாக ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட உள்ள அரசாணையில் இதற்கான விபரங்கள் உள்ளன. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது குறித்த ஆலோசனையிலும் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.