மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டுக்கு முன் சம்பள உயர்வு – 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி வரும் 2022 புத்தாண்டுக்கு முன்னதாக தங்களின் ஊதிய உயர்வினை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகவிலைப்படியுடன் தொடர்புடைய மற்ற பணப்பலன்களும் அதிகரித்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு முன்னதாக 1 ஜனவரி 2020, 1 ஜூலை 2022,1 ஜனவரி 2021 போன்ற மூன்று தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வினை கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக நிலுவையில் வைத்திருந்தது. தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையினை தொடர்ந்து நடப்பு ஆண்டின் முன்பகுதியில் நிலுவை தொகையை வழங்குவதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டது. அதன்பின்னர், மூண்டு தவணைகளுக்கும் 11% DA உஅயர்வு வழங்கப்பட்டது. மொத்தம் 28% DA கிடைத்தது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அதன்பின்னர், நடப்பு தவணையான 1 ஜூலை 2021க்கான DA தீபாவளிக்கு முன்னதாக போனசாக அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மொத்தம் 31% DA உயர்வு பெற்றார்கள். லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் நவம்பர் 2021க்கான சம்பளத்துடன் தீபாவளி போனஸைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து ஊழியர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (ஐஆர்டிஎஸ்ஏ) மற்றும் நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ரயில்வே மேன் (என்எப்ஐஆர்) ஆகியவற்றால் வீட்டு வாடகை படி அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
ஜனவரி 1ம் தேதி முதல் எச்.ஆர்.ஏ-வை அதிகரிக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோருகின்றது. ஊழியர்கள் தங்களின் குடியிருப்பு நகரத்திற்கு ஏற்ற வகையில் HRA பெறுகின்றனர். அரசு நகரங்களை X, Y மற்றும் Z வகைகளாகப் பிரித்துள்ளது. X வகை நகரங்களில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் முன்பை விட ரூ.5400 கூடுதல் HRAம்,Y மற்றும் Z பிரிவில் உள்ளவர்கள் முறையே மாதம் ரூ.3600 மற்றும் ரூ.1800 உயர்வு எதிர்பார்க்கலாம். அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்களின் ஊழியர்கள் டிசம்பர் இறுதிக்குள் பதவி உயர்வுகளைப் பெறலாம் என்று பிரபல செய்தி நாளிதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.