தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகதத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று (நவ.27) 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும் நேற்றுவரை தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்ணனை புரிந்து கொண்ட மூர்த்தி, இட்லி கடை தொடங்கிய ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
இன்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் படி இன்று (நவ.27) 23 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
மேலும் திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைவிடப்பட்டுள்ளது .சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விடியவிடிய மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஆவடியில் 20செ.மீ மழை பெய்துள்ளது.