தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு சுழற்சி காரணாமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ள பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரையை கடந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குமரி மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
அதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10 செ.மீ அதிகமாக மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடிவிடிய கொட்டித் தீர்த்தது. அதனால் மாணவர்களின் நலன் கருதி கனமழை பெய்த பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்திருந்தது.
டிச.15 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம் – போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதாவது தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிக கனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.