தமிழக பொதுமக்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – முக்கிய அரசாணை வெளியீடு!

0
தமிழக பொதுமக்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு - முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழக பொதுமக்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு - முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழக பொதுமக்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – முக்கிய அரசாணை வெளியீடு!

வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இழப்பீட்டு தொகையில் 10 சதவீதம் வெகுமதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முக்கிய அரசாணை:

தமிழக அரசு, வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வணிக வரித் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட அரசாணையில் கூறியது, 2022-2023ம் நிதியாண்டில் வணிகவரித்துறை மானியக் கோரிக்கையின் போது, வரி ஏய்ப்பு குறித்து வணிக வரித் துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும், வரி ஏய்ப்பினை சிறப்பாக கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவலர்களுக்கு வெகுமதி வழங்க நடப்பாண்டில் 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் வணிக வரித்துறை ஆணையர் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதன்படி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அதன் மூலம் வரி வசூல் செய்யும் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வெகுமதியாக தரப்படும். அதேபோன்ற இடைக்கால வெகுமதியாக 5% அல்லது ரூ.10 ஆயிரத்துக்கும் வழங்கப்படும். மேலும் ரூ.4 லட்சம் மேல் தருவதாக இருப்பின் வணிக வரிகள் ஆணையரின் பரிந்துரையின் பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஒரு தனிநபர் அல்லது தகவல் அளிப்பவர்களின் குழுவிற்கு வெகுமதி அளிக்கப்படலாம்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் பழைய வகுப்பு முறை!

இதையடுத்து, அரசு அலுவலராக இருப்பின், அதாவது ஒரு தனிப்பட்ட அதிகாரிக்கான வெகுமதிகள் ரூ.1,00,000க்கு மிகாமல் அனுமதிக்கப்படும். வெகுமதியாக ரூ.4,00,000 வரை ஒரு தனிப்பட்ட அதிகாரி அல்லது குழுவின் , பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன்,வணிக வரித்துறை ஆணையரின் சிபாரிசின் பேரில் அனுமதிக்கப்படலாம். ஒரு அதிகாரி ரூ 10 லட்சம் வரை வெகுமதி பெற தகுதியுடையவர் ஆவார். இதற்கான வெகுமதிகளை சென்னை-1, சென்னை-2, திருச்சி,மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் போன்ற அலுவலகங்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட வேண்டும்.

மேலும் தகவல் தருபவர்களுக்கு ரூ.62 லட்சம், அதிகாரிகளுக்கு ரூ.1.04 கோடி மொத்தம் ரூ.1.66 கோடி வழங்க வேண்டும். வணிக வரி ஆணையரின் முன்மொழிவை கவனமாக ஆய்வு செய்த அரசு, அதை ஏற்றுக்கொண்டு ரூ.1.66 கோடியை 2022-2023ம் நிதியாண்டிற்கான தகவல் வழங்குபவர்கள் மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு வெகுமதிகளை வழங்க ஆணையிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!