தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் பழைய வகுப்பு முறை!
கொரோனா பேரலைத்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு வகுப்புகளை மீண்டும் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல் அளித்துள்ளார்.
விளையாட்டு வகுப்புகள்
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் நிமித்தமாக பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 2 வருடங்களாக மூடப்பட்டிருந்தது. இதற்கிடையில் அவ்வப்போது குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த சூழலில் மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்புகள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு வகுப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் 6 லிருந்து 9 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மீண்டும் விளையாட்டு வகுப்புகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். அதாவது சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் துவக்கி வைத்தார்.
வரி சுமையை குறைக்க KITKAT, PARACHUTE நிறுவனங்கள் செய்த தில்லுமுல்லு – உண்மை நிலவரம்!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு தடை செய்யப்பட்ட விளையாட்டு வகுப்புகளை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, இந்தியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.