இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி 203% ஆக உயர்வு!
இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அகவிலைப்படி 2022 ஜனவரி 1 முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பேரிடரால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. பெருந்தொற்று காலத்தில் நோய் பணிகளுக்கு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை பயன்படுத்தப்பட்டதாக அரசு தெரிவித்தது. இந்த நேரத்தில் அரசு தடுப்பு பணிகளில் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பாதிப்புகள் குறைந்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் படி 31% ஆக அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதரர்களும் பயன் பெற்றனர்.
Exams Daily Mobile App Download
அதன் பிறகு கடந்த மாதம் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக உயர்த்தப்பட்டு 2022 ஜனவரி 1ம் தேதி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான ரயில்வே தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அதன்படி ரயில்வேத்துறை அகவிலைப்படி உயர்வை தலா 7 % ஆக இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளது . மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியத்தொகை குறித்த விவரம் இதோ!
தற்போது அகவிலைப்படி 196 % ல் இருந்து 203% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும். அடுத்த கட்டமாக ஜனவரி 1, 2022 முதல், மேலும் 7 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டு இது ஜனவரி 1 முதல் 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் அகவிலைப்படி 368 சதவீதத்திலிருந்து 381 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி 960 நவம்பர் 18 மற்றும் 1985 டிசம்பர் 31 இந்த ஆண்டுகளில் இடையில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சிபிஎப் பயனாளிகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.