விரைவில் முடிவுக்கு வர இருக்கும் ‘இதயத்தை திருடாதே’ சீசன் 2 – சீசன் 3 விரைவில் அறிமுகம்!
கலர்ஸ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே தொடர் விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சீசன் 3 ஒளிபரப்பாகுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதயத்தை திருடாதே:
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது மராத்தி மொழியில் வெளியான ஜிவ் ஜலா ஏடே பிசா என்கிற தொடரின் ரீமேக் தான் இதயத்தை திருடாதே என்கிற பெயரில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மாணவர்களுக்கு கொரோனா உறுதி , மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் தீடீர் முடிவு!
இதயத்தை திருடாதே தொடரின் முதல் பாகத்திற்கு எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவு கிடைத்ததால் இரண்டாம் பாகம் கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டது. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு அளவுக்கு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. இதயத்தை திருடாதே சீசன்2 தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் சீமா பிந்து என்பவர் சஹானா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மற்றும் கதாநாயகனாக நவீன் குமார் என்பவர் சிவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இதயத்தை திருடாதே சீசன் 2 தொடர் விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருந்தது. அதாவது நவீன் மற்றும் சஹானா பிரிந்து இருந்தாலும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையேயான காதல் காட்சிகள் அற்புதமாக காட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திடீரென சஹானாவின் அப்பா இருப்பது போல கதைக்களம் மாற்றப்பட்டது. இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை பார்க்கவே வெறுப்பாகி வந்தனர். இதனால் இதயத்தை திருடாதே சீசன் 2 தொடர் விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சீசன் 3 வேண்டுமா என ரசிகர்களிடம் கேட்டபோது வேண்டவே வேண்டாம் என கூறும் படியான செய்தியும் வெளியாகி உள்ளது.