மாணவர்களுக்கு கொரோனா உறுதி , மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் தீடீர் முடிவு!

0
மாணவர்களுக்கு கொரோனா உறுதி , மீண்டும் பள்ளிகள் மூடல் - அரசின் தீடீர் முடிவு!
மாணவர்களுக்கு கொரோனா உறுதி , மீண்டும் பள்ளிகள் மூடல் - அரசின் தீடீர் முடிவு!
மாணவர்களுக்கு கொரோனா உறுதி , மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் தீடீர் முடிவு!

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நலன் கருதி நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேரடி வகுப்புகள் ரத்து:

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரசை எந்த ஒரு நாடும் இதுவரை முழுமையாக ஒழிக்கவில்லை. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரசுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பினால், தற்போது பெரிய நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – அரசு அறிவிப்பு!

இருப்பினும், சீனா மட்டும் இன்னும் கூட ஜூரோ கோவிட் கொள்கையில் தீவிரமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டும் வெளியே வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மற்றொரு பெரிய நகரமான, ஷாங்காயில் சுமார் 2.6 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து ஏப்.26 வரை ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரில், நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனா தொற்றால் 12 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பீஜிங் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , அங்கு உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களில் 4 பேருக்கும் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் சீனாவின் பிரதான பகுதியில் 24326 பேருக்கு சமூகத் தொற்று பதிவாகி உள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைச் சீனா அமல்படுத்தி உள்ளதால் சில பகுதிகளில் அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்காக வெளியே வர முடியாமல் சிலர் இறக்கும் சூழல் கூட ஏற்பட்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!