அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியீடு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியீடு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியீடு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியீடு!

இப்போது ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் தகுதியில்லாத நபர்கள் ரேஷன் பொருட்களை பெறுவது கண்டறியப்பட்டால், அவர்களின் கார்டுகளை ரத்து செய்வதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்

நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் அரசு வழங்கிய இந்த இலவச பொருட்களை தகுதியில்லாத பல லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பெற்று வீணடித்ததாக சில தகவல்கள் அரசின் கவனத்துக்கு வந்தது. மேலும், இந்த நடவடிக்கையினால் பல தகுதியுள்ள கார்டுதாரர்களுக்கு பொருள் கிடைக்காமல் போனது.

TN Job “FB  Group” Join Now

இதனை கவனத்தில் கொண்ட மத்திய அரசாங்கம், தகுதியில்லாத நபர்கள் அரசின் இலவச ரேஷன் திட்டத்தில் பொருட்களை வாங்கி வீணாக்குவது தெரிந்தால் அவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஃபிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர், ஆயுத உரிமம், குடும்ப வருமானம் (கிராமத்தில்) இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அவர்கள் ரேஷன் பெற தகுதி இல்லை.

அஞ்சல் துறையில் 38,926 பேருக்கு வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

இப்படிப்பட்டவர்கள் தங்களது ரேஷன் கார்டை அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கவில்லை என்றால், சரிபார்ப்புக்கு பிறகு அவர்களது ரேஷன் கார்டுகளை ரத்து செய்யப்படும் என்றும் ரேஷன் கார்டுதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உணவுத் துறை தெரிவித்துள்ளது. அதனால் தகுதியில்லாத நபர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை விரைவில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!