வாக்கு பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இவ்ளோ இடைவெளியா? சென்னை உயர்நீதிமன்றம் பதில்!
தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 45 நாள் இடைவெளி உள்ளதால் வாக்கு எண்ணிக்கை சீக்கிரம் வைக்க வேண்டும் எபிட்ரா கோரிக்கை மனு தள்ளுபடி.
சென்னை உயர்நீதிமன்றம்:
தமிழகத்தில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். தன்னை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 45 நாள் இடைவெளி உள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – ஊழியர்களின் கோரிக்கை!
இந்த 45 நாட்களும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். எனவே அரசியல் சட்ட விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறும் வகையில் உள்ளதால், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முற்றிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.