இன்று பழனி மலைக்கோயிலில் ‘இந்த’ சேவை ரத்து – அதிகாரப்பூர்வ தகவல்!
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனிமலை கோவிலில் இன்று ஒரு நாள் குறிப்பிட்ட சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோயில்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து இந்த கோயிலுக்கு தினசரி அதிகளவிலான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்க வந்து செல்வார்கள். மலைக்கு மேல் உள்ள கோயிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்கு பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இவ்ளோ இடைவெளியா? சென்னை உயர்நீதிமன்றம் பதில்!
இந்நிலையில் மார்ச் 28ஆம் தேதி ஆன இன்று ஒரு நாள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பணி காரணமாக இந்த சேவை இன்று இயக்கப்படாது என்றும், நாளை முதல் வழக்கம்போல் ரோப் கார் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.