தமிழக ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
தமிழகத்தின் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளே மற்றும் வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா :
தமிழகத்தில் வரும் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக கண்டால் சி விஜில் எனும் மொபைல் செயலி மூலம் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1950 என்ற எண்ணுக்கு கால் செய்தும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று பழனி மலைக்கோயிலில் ‘இந்த’ சேவை ரத்து – அதிகாரப்பூர்வ தகவல்!
ஏப்., 1 முதல் 13 ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடி அலுவலர் வழியாக, பூத் சிலிப் வழங்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே, 68,144 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக, 177 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. எனவே தமிழகத்தில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளே மற்றும் வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.