தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – ஊழியர்களின் கோரிக்கை!
நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கான விடுமுறை குறித்த கோரிக்கைகள் எழுந்துள்ளது.
டாஸ்மாக் விடுமுறை:
தமிழகத்தில் மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக வருமானம் தரக்கூடிய நிறுவனங்களில் டாஸ்மார்க் முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய வேண்டும். பாதுகாப்பு காரணங்கள் கருதி தமிழகத்தில் மார்ச் ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 17ஆம் தேதியும் முழு விடுமுறை அறிவிக்குமாறு டாஸ்மார்க் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்துறை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வு எப்போ தெரியுமா? முழு விவரம் உள்ளே!
ஏப்ரல் 17 மாலை 6:00 மணிக்கு கடைகளை மூடும்போது அதிகபட்ச கூட்டம் இருக்கும். இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். இதே போல் கடைகளை மூடிய பின்னர் கணக்கு பார்ப்பதற்கும் சிரமமான நிலை ஏற்படும். எனவே ஏப்ரல் 17ஆம் தேதி அன்று முழு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும், அதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி டாஸ்மார்க் ஊழியர்கள் வாக்களித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் கடைகளை திறக்க முடியாது. எனவே 19-ம் தேதியும் முழு விடுமுறை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.